Thursday, August 27, 2009

நானும் வரலாமா?




இன்றைய நாள் என் வாழ்கையில் ஒரு மறக்க முடியாத நாள் ஆகப்போகிறது என்றால் மிகையாகாது. காரணம் இன்று முதல் நானும் ஒரு வலைப்பதிவாளன்(ஹி.. ஹி..). இன்றுவரை பலபிரபல பதிவாளர்களினது வலைப்பதிவகளை வெறுமனே வாசித்து மட்டுமே வந்த நான் (பின்னூட்டமிடுவது கூட கிடையாது) இன்று முதல் ஒரு வலைப்பதிவினை சொந்தமாக எழுத ஆரம்பிப்பது என்ற துணிச்சலான முடிவுடன்.......


ஏதோ எழுதிவிடலாம் என்று ஒரு நம்பிக்கையுடன் ஆரம்பிக்கிறேன், ஆனால் எதை எழுதலாம், எதை எழுதப்போகிறேன் என்று சத்தியமாக எனக்குத் தெரியவில்லை. சொல்லப்போனால் வலைப்பதிவு எழுதும் தகுதி என்னிடத்தில் இருக்கிறதா என்னும் கேள்வி எனக்குள்ளேயெ எழுகிறது. ஆயினும் என்னால் இயன்றளவு என் உணர்வுகளை உங்களிடத்தில் உளரலாம் என்ற நம்பிக்கையில் ஆரம்பிக்கிறேன். ஆதரிப்பீர்களா?

வலைப்பதிவு எழுத ஆரம்பிக்க வேண்டும் என்னும் ஆசை எனக்குள்ளும் எப்படி ,வந்தது என்னையும் எழுதத் தூண்டியவை எவை என்பன பற்றி மற்றுமொரு பதிவில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


அன்புடன் -திவா-