Wednesday, September 9, 2009

உனக்குக் கீழே உள்ளவர்களைப் பார்த்து திருப்திகொள்...

மனிதனுக்கு மட்டுமே உள்ளதொரு கெட்டகுணம் என்னவெனில் எவ்வளவுதான் வசதியாக இருந்தாலும், நன்றாக வாழ்ந்தாலும் நமக்கு என்றுமே திருப்தி ஏற்படுவது கிடையாது.. குறிப்பாக நம்மவர்கள் பலரிடத்தில் இருக்கும் வேரோடு அறுத்தெறிய வேண்டியதொரு தீய பழக்கம் யாதெனில் நமக்கு மேலே உள்ளவர்களையும் நம்மைவிட வசதியானவர்களையும் பார்த்து, அவர்களைப்போல் நாமும் இலையே என் வருத்தப்படுவது...

அவர்களுக்கெல்லாம் என்னால் சொல்லக்கூடியது ஒன்று மட்டுமே.. உன்னைவிட உயர்வானவனைப் பார்த்து, அவனைப்போல் நீயும் இலலையே என வருத்தப்படாதே. மாறாக உனக்குக் கீழே உள்ளவர்களைப்ப் பார்.. இந்த உலகில் ஒரு சாதாரண வாழ்வுக்கு அன்றாடம் போராடித் தவித்து வருபவர்களைப் பார்.. ஒருவேளை உணவு கூட கிடைக்காது, இருக்க ஒரு இடம் கிடைக்காது தினம் தினம் அல்லற்படுவோர் இந்த உலகில் எத்தனை எத்தனை பேர்.. அவர்களை ஒருபொழுது எண்ணிப்பார்... உன்வாழ்வில் நீ திருப்தி கொள்வாய்..

எனது நண்பர் ஒருவரிடம் இருந்து "Best email of the year" என்னும் தலைப்பிட்டு எனக்கு கிடைத்தவொரு மினஞ்சலில் இருந்து எடுக்கப்பட்டவையே கீழே உள்ள படங்கள்..


உனது வாழ்க்கை உனக்கு சந்தோசமாக இல்லையா?
இதுதான் இவர்களில் அன்றாட வாழ்வு.. இவர்களைப் பார்த்தாவது இவர்களைவிட நமது வாழ்க்கை சந்தோசமானது எனத் திருப்தி கொள்ளுங்கள்.

உனது வருமானம் உனக்குப் போதாதா?
இந்தச் சிறுவனைப் பாருங்கள்.. இவனை விடவும் நமது வருமானம் அல்லது சம்பளம் அதிகமானது எனத் திருப்தி கொள்ளுங்கள்.


நல்ல நண்பர்கள் இல்லையா உனக்கு?
இவரின் நண்பனைப் பாருங்கள்.. இவர் கொள்ளும் திருப்தி உங்களிடத்தில் மட்டும் ஏன் இல்லை?


உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எதையுமே சுமையாக நினைக்கிறீர்களா?
அது இவர் சுமக்கும் சுமையை விடவுமா அதிகமானது?


நீங்கள் உல்லாசமாக உலாவருவதற்கு கார் ஒன்று இல்லையெனக் கவலைப் படுகிறீர்களா?
இவர்களைப் பாருங்கள். கார் இல்லாதது நமக்கு ஒரு குறையா?


இவற்றையும் பாருங்கள்..








இப்ப என்ன சொல்லறீங்க? இவர்களையெல்லாம் விட விட நாம் வாழும் வாழ்க்கை சந்தோசமானதும் திருப்தியானதுமே...

Thursday, August 27, 2009

நானும் வரலாமா?




இன்றைய நாள் என் வாழ்கையில் ஒரு மறக்க முடியாத நாள் ஆகப்போகிறது என்றால் மிகையாகாது. காரணம் இன்று முதல் நானும் ஒரு வலைப்பதிவாளன்(ஹி.. ஹி..). இன்றுவரை பலபிரபல பதிவாளர்களினது வலைப்பதிவகளை வெறுமனே வாசித்து மட்டுமே வந்த நான் (பின்னூட்டமிடுவது கூட கிடையாது) இன்று முதல் ஒரு வலைப்பதிவினை சொந்தமாக எழுத ஆரம்பிப்பது என்ற துணிச்சலான முடிவுடன்.......


ஏதோ எழுதிவிடலாம் என்று ஒரு நம்பிக்கையுடன் ஆரம்பிக்கிறேன், ஆனால் எதை எழுதலாம், எதை எழுதப்போகிறேன் என்று சத்தியமாக எனக்குத் தெரியவில்லை. சொல்லப்போனால் வலைப்பதிவு எழுதும் தகுதி என்னிடத்தில் இருக்கிறதா என்னும் கேள்வி எனக்குள்ளேயெ எழுகிறது. ஆயினும் என்னால் இயன்றளவு என் உணர்வுகளை உங்களிடத்தில் உளரலாம் என்ற நம்பிக்கையில் ஆரம்பிக்கிறேன். ஆதரிப்பீர்களா?

வலைப்பதிவு எழுத ஆரம்பிக்க வேண்டும் என்னும் ஆசை எனக்குள்ளும் எப்படி ,வந்தது என்னையும் எழுதத் தூண்டியவை எவை என்பன பற்றி மற்றுமொரு பதிவில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


அன்புடன் -திவா-